மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அனுமதிவேண்டி ரணில் விக்ரமசிங்கேவுக்கு நித்தியானந்தா கடிதம்!

nithyananda ranil vikramasinghe

இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு, நித்தியானந்தா கடிதம் எழுதியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா, இந்தியாவிலிருந்து தலைமறைவானர். பின்னர் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியதாகவும், கைலாசா என பெயரிட்டுள்ள அந்த தீவுக்கு தானே அதிபர் எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதையும் அவர் வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் நித்தியானந்தாவின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இலங்கையில் அவர் சிகிச்சைக்காக வேண்டி அடைக்கலம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், தனக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சைக்காக இலங்கை வர தன்னை அனுமதிக்குமாறும் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version