நிர்மலாதேவி வழக்கு – சிபிசிஐடி போலீசாரின் இறுதிக்கட்ட அறிக்கையை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு குறித்த சிபிசிஐடி போலீசாரின் இறுதிக்கட்ட அறிக்கையை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் இறுதிக்கட்ட அறிக்கையை நீதிமன்ற பார்வைக்காக சீலிடப்பட்ட கவரில் வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version