தூக்கு தண்டனைக்கு எதிரான பவன் குப்தாவின் சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையான வழக்கில் முகேஷ் குமார் சிங், வினய் சர்மா, அக்சய் குமார், பவன் குப்தா ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பேருக்கும் திகார் சிறையில் நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக பவன் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தனர். மனுவை பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Exit mobile version