மாணவர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்தது பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி பொறுப்பு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில், கடந்த 17 ஆம் தேதி சட்டத்திற்கு புறம்பாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணையை முடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த பெயர் பட்டியல், காவல்துறை சார்பில், கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 9 பேரை இடைநீக்கம் செய்து, பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், முதல்வரின் அனுமதி இன்றி, மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி பொறுப்பு முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version