News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சுற்றுச்சூழல் விவகாரங்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

Web Team by Web Team
August 3, 2021
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சுற்றுச்சூழல் விவகாரங்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் பொருந்தக் கூடிய தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதற்கும் பொருந்தக் கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சுற்றுச்சூழல் தொடர்பான குறைகளுக்கு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக நாடு முழுவதும் ஐந்து அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக குடிமக்கள், டில்லிக்கு பயணப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டங்களுக்கு விரோதமானது என்பதால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வுகள் எங்கு அமைய வேண்டும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட மாநிலங்கள் எவை என குறிப்பிட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவிப்பாணை இல்லாமல், பிற அமர்வுகளில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வு விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறி, அதன் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags: environmentNGTNGT casesசூழலியல்பசுமை தீர்ப்பாயம்
Previous Post

எனக்கும் பள்ளிக்கும் தொடர்பில்லை: பல்டி அடித்த பாபா

Next Post

டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

Related Posts

விதிகளை மீறி சாகச பொழுதுபோக்கு மையம்! சுற்றுச்சூழல் பாதிக்கும் என மக்கள் வேதனை!
அரசியல்

விதிகளை மீறி சாகச பொழுதுபோக்கு மையம்! சுற்றுச்சூழல் பாதிக்கும் என மக்கள் வேதனை!

September 2, 2023
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை அழிக்க ஆயத்தமாகும் திமுக அரசு!
அரசியல்

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை அழிக்க ஆயத்தமாகும் திமுக அரசு!

June 5, 2023
மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்
TopNews

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

May 25, 2021
363 மரங்களோடு சேர்த்து வெட்டப்பட்ட மனிதர்கள்… சிப்கோ இயக்கத்தின் ரத்த மரங்கள் கதை
TopNews

363 மரங்களோடு சேர்த்து வெட்டப்பட்ட மனிதர்கள்… சிப்கோ இயக்கத்தின் ரத்த மரங்கள் கதை

May 21, 2021
கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!
TopNews

கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!

January 12, 2021
விழிப்புணர்வு விளம்பர படங்களுக்கு பரிசு: சுற்றுச்சூழல் துறை
TopNews

விழிப்புணர்வு விளம்பர படங்களுக்கு பரிசு: சுற்றுச்சூழல் துறை

November 13, 2019
Next Post
டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version