பிரதமரின் விவசாயிகள் வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்த சிறு, குறு விவசாயிகளுக்கு 2-ம் தவணைத் தொகையான 2 ஆயிரம் ரூபாய் அடுத்த மாதம் முதல் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்த உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மக்களை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிரதமரின் விவசாயிகள் வருவாய் உறுதி திட்டத்தின்கீழ், பதிவுசெய்துள்ள 4 கோடியே 74 லட்சம் விவசாயிகளில், 2 கோடியே 74 பேருக்கு முதல் கட்ட தவணை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட தவணை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றும், 2ம் கட்ட தவணையாக அடுத்த மாதம் முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.