தமிழ் சினிமாவில் அடுத்த ’ஜாக்பாட்’

வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஜோதிகா முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துவிட்டார்.மேலும் film fare awards-ல் அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதினை பெற்றார்.தொடர்ந்து குஷி,சிநேகிதியே,திருமலை,மன்மதன் ஆகிய திரைப்படங்கள் நடித்தார். 2008 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வளம் வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை.பின்பு 2015 ஆம் ஆண்டு சூர்யா தயாரிப்பில் உருவான ’36 வயதினேலே’ படத்தில் தமிழ் சினிமாவில் ரீ எண்டரி கொடுத்தார்.

தற்போது சினிமாவில் தனது இரண்டாவது ரவுண்டை துவங்கிய நடிகை ஜோதிகா தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தை தொடர்ந்து ராட்சசி, நடிகர் கார்த்தியின் அக்காவாக ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில் அவர் தனது கணவர் நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் “ஜாக்பாட்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகை ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். “குலேபகாவலி” திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களை தொடர்ந்து தனது கணவர் தயாரிப்பில் ஜோதிகா மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version