நாமக்கல்லில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக பள்ளி கட்டடங்கள் திறப்பு

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட கட்டடங்களை மின்சார துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட நடுநிலைப் பள்ளியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version