கூடலூருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர்… என்ன செய்தி?

நீலகிரி மாவட்டம் கூடலூரில், மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கூடலூரில் அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கூடலூர் அருகே சுமார் 442 கோடி ரூபாய் மதிப்பில் உலக தரத்தில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.

வீடில்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரும் என்றும், யானை வழித்தடங்களில் வசிக்கும் மக்கள் பட்டா மற்றும் மின்சார வசதி கோரி மனு அளித்துள்ளதாகவும், அதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த தேர்தல் பிரசாரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

Exit mobile version