அரசு வழங்கும் மதிய உணவை போல சுவையான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் மாணவர்களுக்கு இசை குறித்து விளக்கம் அளித்ததுடன் பாடல்கள் பாடி அவர்களுடன் கலந்துரையாடினார்.