நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: கல்லூரி முதல்வரிடம் தனிப்படை விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மாணவன் உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக எழுந்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் உஷாராணி தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

உதித் சூர்யாவை தேடி, தனிப்படை சென்னை விரைந்த நிலையில், மாணவன் பெற்றோருடன் தலைமறைவானது தெரியவந்தது. முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உதித் சூர்யா மனு தாக்கல் செய்த நிலையில், தனிப்படை அதிகாரிகள், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், விசாரணை நடத்தினர். முதலாம் ஆண்டு சேர வந்த மாணவர்கள் தொடர்பான சிசிடிவி பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

Exit mobile version