News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நெருங்கும் பொங்கல் பண்டிகை – சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு

Web Team by Web Team
January 12, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நெருங்கும் பொங்கல் பண்டிகை – சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு
Share on FacebookShare on Twitter

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் தினசரி இயக்கப்படும் 6,150 பேருந்துகளுடன், 4,078 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற பகுதிகளில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 13 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லியில் ஒரு மையமும் செயல்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஒரு லட்சம் பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் அரசின் முன்னேற்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு, பாதுகாப்பாக பொங்கல் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சிரமமின்றி பொதுமக்கள் செல்ல வசதியாக, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி வரை, 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து பணிகளுக்கு திரும்புவோர் வசதிக்காக ஜனவரி 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் இயக்கம் பற்றி அறிய பிரத்யேக செல்போன் எண்களும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

Tags: இணைப்புப் பேருந்துகோயம்பேடு பேருந்து நிலையம்சிறப்புப் பேருந்துசென்னை கோயம்பேடுடிக்கெட் முன்பதிவுபொங்கல்மாநகரப் போக்குவரத்துக் கழகம்
Previous Post

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Next Post

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி

Related Posts

தீபாவளியையொட்டி அரசுப் பேருந்துகளில் 13,24,000 பேர் பயணம்!
TopNews

தீபாவளியையொட்டி அரசுப் பேருந்துகளில் 13,24,000 பேர் பயணம்!

November 20, 2020
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்
TopNews

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்

March 24, 2020
பிரதமர் மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்து
TopNews

பிரதமர் மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்து

January 15, 2020
அதிமுக தலைமை பொங்கல் வாழ்த்து
TopNews

அதிமுக தலைமை பொங்கல் வாழ்த்து

January 14, 2020
தமிழக மக்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து
TopNews

தமிழக மக்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து

January 14, 2020
பொங்கல் விடுமுறையால் களைகட்டிய வண்டலூர் உயிரியல் பூங்கா
TopNews

பொங்கல் விடுமுறையால் களைகட்டிய வண்டலூர் உயிரியல் பூங்கா

January 18, 2019
Next Post
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் - பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version