இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் நடால் வெற்றி

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி பைனலில் ஸ்பெயினின் ரபேல் நடால் செர்பியாவின் ஜோகோவிக்கை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் சென்ட்ரல் கோர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் சுற்று ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக்கை ஸ்பெயினின் ரபேல் நடால், எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 4க்கு 6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டில் தோல்வியடைந்தார். பின்னர் இறுதியாக வெற்றியாளரை நியமிக்கும் கடைசி செட்டில் நடால் 6க்கு 1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். இந்த போட்டியின் முடிவில் நடால் 9 சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version