பாரத ஸ்டேட் வங்கியை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த, 500 சவரன் நகை மற்றும் 18.5லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அது தவிர வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ள கொள்ளையர்கள், ஹார்டு டிஸ்குகளையும் திருடிச் சென்றனர். கொள்ளையர்களை 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார். இதே வங்கியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடைபெற்றதும், சமீபத்தில் காவல்துறையின் பாதுகாப்பு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version