தெலுங்கானாவில் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் மர்ம மரணம்

தெலுங்கானாவில்15 நாட்களுக்கு முன் மாயமான சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் கால்வாயில் தண்ணீருக்குள் கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ரெட்டியின் இளைய தங்கை அவரது கணவர் சத்தியநாராயணா மற்றும் மகள் சகஸ்ரா ஆகியோருடன் கடந்த மாதம் 27 ஆம் தேதி பெத்த பள்ளியில் இருந்து கேரளாவுக்கு காரில் சுற்றுலா  சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் புறப்பட்டு சென்ற மறுநாளில் இருந்து அவர்களின் செல்போன்கள் அனைக்கப்பட்டு இருந்ததால் யாராலும் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதுகுறித்து அவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காணாமல் போனவர்களை, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அலுகுனூரு கிராமம் அருகே, காணாமல் போனவர்களின் கார், கால்வாயில் கவிழ்ந்து கிடப்பது தெரியவந்துள்ளது. கிரேன் உதவியுடன் அதனை வெளியே எடுத்த போது உள்ளே இருந்தவர்களின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.  தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

Exit mobile version