மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கும்பகோணம் பகுதியில் கடந்த 9 மாதமாக மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . தண்ணீர் பிரச்சனை தீரவும், மழை பெய்ய வேண்டியும் கும்பகோணம் அல் அமின் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையை குடந்தை வட்டார ஜமாத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது.

Exit mobile version