நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இசைக்கருவிகள்

நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், நாட்டுபுற கலையை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் நல வாரியம் சார்பில் இலவச இசைக்கருவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள நலிந்த இசைக்கலைஞர்கள் 10 பேருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஸ் வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த இசைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரம் காத்த தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சிதலைவருக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version