இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக முகுந்த் நராவனே இன்று பதவியேற்பு

இந்திய ராணுவத்தின் 28 வது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்கிறார்.

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே, ராணுவ தலைத் தளபதியாக இன்று பொறுப்பேற்கவுள்ளார். முன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version