முகென் தான் வெற்றி பெறுவார் : பிக்பாஸ் 1 போட்டியாளரின் கணவர் உறுதி

பிக்பாஸ் 2 போட்டியாளரான சுஜாவின் கணவர் சிவக்குமார், முகென் தான் வெற்றிப்பெறுவார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.நாட்கள் குறைய குறைய பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளும், போட்டிகளும் எழுந்தது.இன்று சவால்களை தாண்டி 8 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.இவர்களில் மூன்று பேர் மட்டுமே இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள்.

அந்த மூன்று பேரில் ஒருவராக வரவேண்டும் என்பதற்காக பிக்பாஸில் அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு விளையாடுகின்றனர்..வீட்டில் உள்ளவர்களே தர்ஷனுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என கூறினாலும், தானும் வெற்றிப்பெற வேண்டும் என்ற ஆசையும் அனைவரின் மனதிலும் இருக்கிறது.Ticket to finale டாஸ்க் தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது.அந்த டாஸ்க்கில் முகென் தான் முன்னிலையில் இருக்கார், அவர் silent -ஆக இருந்தாலும் போட்டிகளில் violent-ஆக விளையாடுகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் 1 போட்டியாளரின் ஒருவரான சுஜாவின் கணவர் சிவக்குமார், முகென் தான் வெற்றிப்பெறுவார் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ’எனக்கு முகென் தான் வெற்றிப்பெறுவார் என தோணுகிறது.நாளுக்கு நாள் அவர் விளையாடும் விதம் ரசிக்க வைக்கிறது.எனக்கு ஏற்கனவே மலேசியா ரொம்ப பிடிக்கும் ,இப்போ முகெனால் இன்னும் பிடிக்கிறது என கூறியுள்ளார்.

 

Exit mobile version