News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முதியவரை செங்கற்களால் அடித்துக் கொன்ற குரங்குகள் – குரங்குகளை கைது செய்ய போலீஸ் மறுப்பு

Web Team by Web Team
October 20, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
முதியவரை செங்கற்களால் அடித்துக் கொன்ற குரங்குகள் – குரங்குகளை கைது செய்ய போலீஸ் மறுப்பு
Share on FacebookShare on Twitter

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இவற்றால் பெரும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு வினோத துயரச் சம்பவம் பாக்பட் நகரின் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது. தரம்பால் சிங் என்ற 72 வயது முதியவர், சமையலுக்காக விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.

ஒரு இடிந்த கட்டிடத்தின் அருகே விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது, கட்டிடத்தின் மேலே இருந்த குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை எடுத்து முதியவர் மீது வீசியுள்ளன.

அடைமழை பெய்தது போன்று அடுத்தடுத்து வந்த கற்களால், நிலை குலைந்து போன முதியவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

தலை, மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதியவர் தரம்பால் சிங்கின் உறவினர்கள், இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

குரங்குகளை குற்றவாளிகளாக சேர்த்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இதனை கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீசார், குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

மேலும் வினோத விபத்து என வழக்கு பதிவு செய்தனர். இதனால் முதியவரின் உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இது போன்று குரங்குகள் தொல்லை இருப்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

rhesus macaque எனப்படும் செம்முக குரங்குகளே இவ்வாறு அதிகம் இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வகை குரங்குகள் மனித குடியிருப்புகளுக்கு நெருக்கமாக வாழும் தன்மை கொண்டவை. இந்த குரங்கு இனம் பற்றி புறநானூற்றில் குறிப்புகள் உள்ளது என்பது கூடுதல் தகவல். எனினும் இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.

 

courtesy times of india

Tags: MonkeyUttar Pradesh
Previous Post

நொடிப் பொழுதில் பறிபோன 60 உயிர்கள் – விபத்திற்கு சற்று முன் புறப்பட்ட சித்து மனைவி! 

Next Post

மீ டூ வால் தற்கொலைக்கு முயன்ற பிரபலம் – ஆற்றில் குதிக்க முயன்றபோது, தடுத்து நிறுத்திய போலீசார்

Related Posts

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்பி, சகோதரருடன் சுட்டுக்கொலை..!
இந்தியா

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்பி, சகோதரருடன் சுட்டுக்கொலை..!

April 17, 2023
வன சான்றளிப்பு என்றால் என்ன?
இந்தியா

வன சான்றளிப்பு என்றால் என்ன?

March 6, 2023
அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !
இந்தியா

அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !

February 7, 2023
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
துர்க்கை படத்துடன் ஆற்றில் மிதந்து வந்த பெட்டி ? கிடைத்த பொக்கிஷம் என்ன?
Top10

துர்க்கை படத்துடன் ஆற்றில் மிதந்து வந்த பெட்டி ? கிடைத்த பொக்கிஷம் என்ன?

June 17, 2021
ஹத்ராஸ் வழக்கு- சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு
TopNews

ஹத்ராஸ் வழக்கு- சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு

October 4, 2020
Next Post
மீ டூ வால் தற்கொலைக்கு முயன்ற பிரபலம் – ஆற்றில் குதிக்க முயன்றபோது, தடுத்து நிறுத்திய போலீசார்

மீ டூ வால் தற்கொலைக்கு முயன்ற பிரபலம் - ஆற்றில் குதிக்க முயன்றபோது, தடுத்து நிறுத்திய போலீசார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version