கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஏராளமான குரங்குகள் புகுந்து புத்தகங்கள், மாணவர்களின் பை, உணவு பொருட்கள் மற்றும் பள்ளியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் அச்சமடைந்த மணவர்கள் பள்ளிக்கு வர தயக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் 15க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.

Exit mobile version