கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவுடன் மோடி பேச்சு வார்த்தை

இந்தியாவின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

தனது ட்விட்டர் பதிவில், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் உடன் விரிவான பேச்சு நடத்தியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளையும் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பையும் வலுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை  நடத்தியதாகவும் பதிவிட்டுள்ளார். 5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Exit mobile version