நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

74ஆவது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய சிறப்பான உரைக்கு, உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றினார். பிரதமர் மோடி செயல்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்திற்காக, பில்கேட்ஸ் அரக்கட்டளை சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version