ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் அவசர கட்டுப்பாட்டு அறையில் இரவு முழுவதும் பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவ குழுக்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  இந்த  ஆண்டு சுகாதாரத்துறையில் புதிய திட்டங்களை, செயல்படுத்த தயாராக உள்ளதாக  தெரிவித்தார்.

Exit mobile version