செங்கம் அருகே ரூ.33 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

செங்கம் அருகே தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொரட்டாம்பட்டு ஏரியில், தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாருதல், மதகு பணிகள், கரை பலப்படுத்துதல் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Exit mobile version