அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான டயாலிஸிஸ் கருவி வழங்கிய அமைச்சர்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான டயாலிஸிஸ் இயந்திரத்தைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான டயாலிஸிஸ் இயந்திரத்தினை வழங்கினார். இதில், அங்குள்ள மருத்துவர்களிடம், அமைச்சர் சி.வி. சண்முகம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.

Exit mobile version