இஸ்லாமிய மக்களுக்கு திமுக ஆட்சியில் உதவியே கிடைக்கவில்லை: நிலோபர் கபில்

இஸ்லாமிய மக்களுக்கு திமுக ஆட்சியில் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என அமைச்சர் நிலோஃபர் கபில் குற்றம்சாட்டியுள்ளார்.

ரம்ஜானை ஒட்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலின் இல்லத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நிலோஃபர் கபில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இஸ்லாமிய மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய மக்களுக்கு திமுக ஆட்சியில் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version