தினகரன் தனிமரமாக தான் நிற்பார் – அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் தனிமரமாக தான் நிற்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், மாணவர் அணி கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களான ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், வளர்மதி மற்றும் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வின் மாணவர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் நடத்துவது கட்சி கிடையாது, குழு என்றும், விரைவில் தினகரன் தனிமரமாக தான் நிற்பார் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version