முகிலன் காணாமல் போனதை கூட அரசியலாக்குகிறது திமுக: அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசனின் மணிமண்டபத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்த பெரும் தலைவர் இரட்டை மலை சீனிவாசன் என புகழாரம் சூட்டினார். பல்வேறு வகையில் மக்களுக்காக பொதுப்பணியில் ஈடுபட்டவர் என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

அப்போது, முதலாம் ஜார்ஜ், இரண்டாம் ஜார்ஜ் என வாரிசு வழியாக அரசு நடத்தும் கட்சி அதிமுக அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உயர்வுக்காகவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் முகிலன் காணாமல் போனதைக்கூட திமுக அரசியலாக்குகிறது என்றும் தெரிவித்தார். 

Exit mobile version