தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக: ஜெயக்குமார்

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயகுமார், இரட்டை இலைக்கு வாக்களிக்க பொதுமக்களை கேட்டுக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது திமுக தான் என்றார். நல்வழியில் அதிமுக ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version