மீன்வளத்துறைக்கு தனித்துறை : அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

மீனவர் நலனுக்காகவும், மீன்வளத்துறையை மேம்படுத்தவும் தனித்துறை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தியதற்கும் வரவேற்பு தெரிவித்தார்.

மீனவர்கள் நலனுக்காக தனித்துறை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மீனவ மக்கள் முன்னணி மாநிலப் பொருளாளர் ரூபேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Exit mobile version