உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தையொட்டி மினி மராத்தான் போட்டி

உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,பவானியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி சார்பில், விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மரம் வளர்த்தல் மற்றும் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த போட்டி நடைபெற்றதாக, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த மராத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

Exit mobile version