மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியைத் தாண்டியது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் 82 அடியைத் தாண்டியுள்ளது.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர், நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியைத் தாண்டியுள்ளது. அணையிலிருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் – மேட்டூர் நீர் வழி தடத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version