2019 ஆம் ஆண்டு FIFA-வின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்சி

2019 ஆம் ஆண்டு பிஃபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சி தட்டிச் சென்றுள்ளார்.

இத்தாலியின் மிலனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மெஸ்சிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா ஓவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது நேற்று வழங்கப்பட்டது. அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சிக்கும், நெதர்லாந்து வீரர் விர்ஜில் வேன் டிஜ் க்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் லியோனன் மெஸ்சி சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக அமெரிக்காவைச் சேர்ந்த மெகன் ரொபினோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version