News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மே 5: புத்தகங்களை விழுங்கப் பிறந்தவன்…. காரல் மார்க்ஸ் பிறந்தநாள்

Web Team by Web Team
May 5, 2021
in TopNews, இந்தியா, உலகம், கட்டுரைகள், செய்திகள்
Reading Time: 1 min read
0
மே 5: புத்தகங்களை விழுங்கப் பிறந்தவன்…. காரல் மார்க்ஸ் பிறந்தநாள்
Share on FacebookShare on Twitter

புத்தகங்களால் உலகம் மாறும். புத்தகங்கள் உலக மாற்றத்தை உருவாக்கும் என்ற வார்த்தைகளுக்கு உருவங்கள் கொடுத்தால் அது காரல் மார்க்ஸின் உருவம் முதலிடம் பிடிக்கும். போராடும் உலகம் கொண்டாடும் தலைவன், சிந்திக்கும் எவருக்கும் சிறந்த துண்ஐவன்,  மனிதகுலப் பரிணாமத்தை மாற்றுப் பார்வைய்லி சிந்திக்க ஆரம்பிப்போருக்கு, அரிச்சுவடி முதல் ஆய்வு வழிகாட்டி வரை என சர்வதேசக் குறியீடான காரல் மார்க்ஸின் பிறந்தநாள் இன்று.  

 

தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது. இன்னும் குறிப்பாக சொல்வதானால் மார்க்ஸின் இறப்பைக் குறிப்பதற்கும் கூட  “மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான்” என்ற ஏங்கல்ஸின் ஆழமிக்க வார்த்தைகளே இன்றளவும் பயன்படுகின்றன. அந்த நட்பின் அழுத்தம் அப்படி. 

அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான காரல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்.

Tags: 15 நாள் கால அவகாசம்காரல் மார்க்ஸ்மார்க்ஸ்மே 5
Previous Post

ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

Next Post

செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Related Posts

அமைச்சர் வந்தாதான் திறப்போம்… அடம்பிடிக்கும் அதிகாரிகள் அழுகும் நெல்மூட்டைகள்
TopNews

அமைச்சர் வந்தாதான் திறப்போம்… அடம்பிடிக்கும் அதிகாரிகள் அழுகும் நெல்மூட்டைகள்

July 19, 2021
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு
TopNews

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு

October 10, 2019
அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபை உறுப்பினர்களை தக்கவைத்தது டிரம்ப் கட்சி
TopNews

அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபை உறுப்பினர்களை தக்கவைத்தது டிரம்ப் கட்சி

November 7, 2018
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
TopNews

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

October 26, 2018
வருமான வரியை தாக்கல் செய்ய 15 நாள் கால அவகாசம்
TopNews

வருமான வரியை தாக்கல் செய்ய 15 நாள் கால அவகாசம்

August 29, 2018
Next Post
செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை:  மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version