வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 69 பேர் பலி

வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்புகள் இயங்கி வருகிறது. குடியிருப்பின் ஒருபகுதியில் ரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று காலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் ஏற்பட்ட தீ, மளமளவென குடியிருப்புகள் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். மேலும்,பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் சிலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version