17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி தேர்வு?

17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விரைவில் மக்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி பாஜகவை சேர்ந்தவரும் மக்களவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவருமான மேனகா காந்தி தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வரும் ஜூன் 3 ஆம் தேதி மக்களவையின் தற்காலிக சபாநாயகர் யார் என்பது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். 

Exit mobile version