News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த போதை கும்பல் – ஒருவர் கொலை

Web Team by Web Team
September 20, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த போதை கும்பல் – ஒருவர் கொலை
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில், பட்டாக் கத்தியுடன் வந்த கஞ்சா கும்பல் ஊரையே சூறையாடியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் கோவிந்தவாடி அகரம் உள்ளது. இங்கு கஞ்சா போதைக்கு அடிமையாகி முக்கியப் புள்ளியாக வலம் வந்தவர் புருஷோத்தமன். புருஷோத்தமன் மீது காவலரை அரிவாளால் தாக்கிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ரவுடி புருஷோத்தமன்னுக்கும் கோவிந்தவாடி அகரத்தில் முக்கிய புள்ளியாக உள்ள சஞ்சீவிராயன் என்பருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் முகமூடி அணிந்து கொண்டு புருஷோத்தமன் மற்றும் அவனுடைய ஆட்கள் கோவிந்தவாடி அகரம் ஊருக்குள் பட்டாக் கத்தியுடன் சஞ்சீவிராயன் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சஞ்சீவிராயன் தம்பியான தனஞ்செழியன் தட்டிக் கேட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்த ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் தனஞ்செழியன் மற்றும் உடன் வந்தவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் கழுத்தில் வெட்டுப்பட்ட தனஞ்செழியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதில் சஞ்சீவிராயன், மனைவி ராதா, மகன்கள் தட்சிணாமூர்த்தி, யதேந்திரன், உறவினர்கள் சுபாஷினி, தேவகி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலுசெட்டிச்சத்திரம் காவல்துறையினர் உயிரிழந்த தனஞ்செழியன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் கவால்துறையினர், வழக்கு பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, தனஞ்செழியன் கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்து, காவல்துறையினர் கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளிகளான, விஜயகுமார், சரத்குமார், ஆகிய இருவரையும் குண்டாசில் சிறையில் அடைக்க, கலெக்டர், பொன்னையா உத்தரவிட்டார்.

Tags: கஞ்சா
Previous Post

இந்தியாவில் முதல் முறையாக நாய்களுக்கான ரத்ததான கைபேசி செயலி அறிமுகம்

Next Post

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் லோன் மேளா

Related Posts

இடுக்கி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
செய்திகள்

இடுக்கி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

July 29, 2019
பெரம்பலூர் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
செய்திகள்

பெரம்பலூர் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது

July 13, 2019
காட்பாடி ரயில் நிலையத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்திகள்

காட்பாடி ரயில் நிலையத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்

May 30, 2019
ஆந்திராவில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
இந்தியா

ஆந்திராவில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

May 14, 2019
Next Post
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் லோன் மேளா

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் லோன் மேளா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version