மது போதையில் நண்பர் அடித்துக் கொலை; ஒருவர் கைது

சென்னை அம்பத்தூரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள கொரட்டூரில் நண்பரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். மாதனாகுப்பம் பகுதியில் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பணியாற்றி வருபவர்கள் முருகேசன் மற்றும் மணிகண்டன். இவர்கள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையில் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் கட்டையால் தாக்கியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனை கைது செய்த கொரட்டூர் போலீசார் விசாரிணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version