கோயம்பேட்டில் வெட்டப்பட்ட இளைஞர் பலி

கிண்டல் செய்த காரணத்தால் கோயம்பேட்டில் நடந்துள்ள இரண்டு கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பாரதியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 17 வயது வாலிபர் தனது காதலியை கிண்டல் செய்த காரணத்தால், கணேஷ் என்ற இளைஞரை கடந்த மே மாதம் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இச்சம்பவத்தால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட விக்னேஷ், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரை, ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி விட்டு சென்றது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரை கொலை செய்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணேஷை கொலை செய்ததற்கு பழி தீர்ப்பதற்காக அவரை வெட்டினோம் என்று வாக்குமூலம் தந்துள்ளனர்.

Exit mobile version