புனேவில் சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்ச நிவராணம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் குடும்பத்தாருக்கு தலா 7 லட்ச ரூபாய் நிவராணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. புனேவில் இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கோந்த்வா என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், சுவர் ஓரமாக தங்கியிருந்த பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் ஆண்கள், ஒரு பெண், குழந்தைகள் என 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா அரசு, தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இதே போன்று பீகார் அரசும் தலா 2 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது.

Exit mobile version