கட்டைப் பைகளுக்கான தடையை நீக்க கோரிய மனு தள்ளுபடி

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பட்டியலில், கார்பனேட் பைகள் எனப்படும் கட்டைப்பைகள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக்குகளை பயன்படுத்த தடைவிதித்து, கடந்த ஜூன் 2018-ல் அரசாணை வெளியிடப்பட்டது என்றும் இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 1 முதல் அமலில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாணையில் கார்பனேட் பைகள் எனப்படும் கட்டைப்பைகளும் கடந்த டிசம்பரில் சேர்க்கப்பட்டன என தெரிவித்துள்ள அவர், கட்டைப்பைகள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Exit mobile version