மாஸ் காட்டப் போகும் மதுரை மாநாடு! முன்னாள் அமைச்சர்கள் கள ஆய்வு!

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில், மிக பிரமாண்டமாக அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, காண்போரை வியக்கும் வகையில், மாநாட்டின் நுழைவு வாயில் போன்ற பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உலகிற்கு அதிமுகவின் வலிமையை பறைசாற்றம் வகையிலும், வரக்கூடிய தேர்தல்களில் ஆளும் கட்சியாகும் அளவிற்கு மதுரை மாநாடு அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். மேலும், மணிப்பூர் விவகாரத்திலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஓங்கி குரல் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version