பிக்பாஸ் வீட்டில் கவினை பார்த்தவுடன் காதலில் விழுந்த லாஸ்லியா…

இன்று பிக்பாஸ் வீட்டில் 103வது நாள்.இறுதி போட்டியாளர்களாக லாஸ்லியா, முகென், ஷெரின், சாண்டி மட்டுமே வீட்டில் உள்ளனர்..நேற்று பிரியங்கா மற்றும் ம.கா.பா வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

இன்றைய பிக்பாஸ் வீட்டிற்கு தர்ஷன் மற்றும் கவின் வருகின்றனர்.இருவரையும் பார்த்தவுடன் போட்டியாளர்கள் சந்தோஷத்தில் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றனர்.லாஸ்லியோ கவின், கவின் என கத்த, சாண்டி கவினை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்.அதோடு லாஸ்லியாவோ கவினை ஏக்கத்தோடு பார்க்கிறார்.ஷெரினோ தர்ஷனிடம் ’உன்ன நான் மிஸ் பண்ணனே, எப்படி? என கேள்வி கேட்கிறார்.பின்பு முகென், தர்ஷன் , சாண்டி மூவரும் கத்திக்கொண்டு வீட்டை சுற்றி வருகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா அவரின் தந்தையுடன் video call மூலம் உரையாடுகிறார்.அப்பா sorry எதும் நினைக்காதீங்க, நான் வெளில வந்து எல்லாமே சொல்றேன் என கூறிவிட்டு கதறி அழுகிறார்.இறுதி போட்டியை நோக்கி செல்லும் பிக்பாஸ் வீடு சற்று விறுவிறுப்பாக மாறியுள்ளது.

Exit mobile version