ஆற்றுப்பால சுவர் மீது மோதி, அந்தரத்தில் தொங்கிய லாரி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள சங்கரபரணி ஆற்று பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கரபரணி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில், சென்னையிலிருந்து தண்டவாளங்களை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவற்றின் மீது மோதியது. லாரி அந்தரத்தில் தொங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Exit mobile version