மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

வன்முறை காரணமாக மேற்கு வங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணியில் பலத்த வன்முறை ஏற்பட்டது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்குள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version