காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குண்ணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குண்ணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post