கொடைக்கானலை ஆனைமலை சரணாலயத்துடன் இணைக்கும் பணி துவங்கியது

கொடைக்கானல் மலையை ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியானது ஏற்கனவே வன உயிரின சரணாலயமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளை ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் இணைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடந்தால் வனப்பகுதிகளின் அருகே உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், வனப்பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் நிலை ஏற்படும் எனவும் விவசாய தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொடைக்கானல் மலையை ஆனைமலை புலிகள் சரணாலயமாக இணைத்தால் வனப்பகுதி செழிப்படையும், விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கு என்று தெரிவித்துள்ள அம்மாவட்ட வன அலுவலர் தேஜஸ்ஸ்ரீ, இதனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.

Exit mobile version