தண்ணீரில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் பலி

நாமக்கல் அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல் மாவட்டம் கடகால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நல்லுசாமி மற்றும் மணிகண்டன். 9-ம் வகுப்பு மாணவர்களான இருவரும் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் தண்ணீருக்குள் மூழ்கினார். இதையடுத்து நல்லுசாமி அவரை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நாமக்கல் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டனர். பள்ளி மாணவர்கள் இருவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version