News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை – வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்

Web Team by Web Team
June 25, 2021
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை – வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்
Share on FacebookShare on Twitter

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஸ்மயா நாயர் ஆயுர்வேதா மருத்துவ மாணவி. இவருக்கும் கிரண் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் கிரண்குமார் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். விஸ்மயா நாயரை திருமணம் முடித்துகொடுத்த போது, அவரது தந்தை திரிவிக்ரமன் நாயர், 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் மதிப்புள்ள காரை வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், `இது போதாது கூடுதலாக கொண்டு வா!’ என்று கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் குளியலரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஸ்மயா நாயர். இந்த சம்பவம் கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு `காட்டுமிராண்டி தனமான வரதட்சணை முறை’ என்று சுட்டிக்காட்டியுள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சிறப்பு அதிகாரிகள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகத்தில் நடைமுறையில் உள்ள திருமண முறையை சீர்திருத்த வேண்டும். திருமணம் என்பது குடும்பத்தின் சமூக அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தை மையமாக கொண்டு இருக்க கூடாது. காட்டுமிராண்டித்தனமான வரதட்சணை முறையானது மகள்களை வெறும் பொருட்களாக மாற்றி  இழிவுபடுத்துகிறது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நாம் அவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

image

கொல்லத்தில் உள்ள தனது கணவன் வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா இறப்பதற்கு முன்பு தனது பெற்றோருக்கு வாட்ஸப்பில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் தனது தலைமுடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயிரிழந்த விஸ்மயாவின் சகோதரன் விஜித் கூறுகையில்,  “என் தங்கையின் மரணம் என்பது தற்கொலை அல்ல; கொலை. வரதட்சணை கொடுமையால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

“கடந்த ஜனவரி மாதம் எங்கள் வீட்டுக்கு வந்த விஸ்மயாவின் கணவர், எங்கள் கண்முன்பாகவே என் மகளை தாக்கினார்” என்று கண்ணீர்மல்க பேசுகிறார் அவரது தந்தை. கல்வியறிவு மிகுந்த மாநிலமாக கூறப்படும் கேரளாவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tags: DowryKerala Womannewsjஉயிரிழப்புதற்கொலைவரதட்சணைவிஸ்மயா நாயர்
Previous Post

அதென்ன ராஜன் வழக்கு? எமெர்ஜென்ஸி தெரிஞ்சவங்க இதையும் தெரிஞ்சுக்கணும்

Next Post

`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ – விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ – விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி

`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ - விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version